search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற 7 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 7 பேர் கைது

    • கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
    • மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓசூரை அடுத்த பேரிகை பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அங்கு சென்று சோதனை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது35) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டபோது பாராண்டபள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), ராசுவீதியைச் சேர்ந்த யுவராஜ் (45), சூளகிரியை அடுத்த மூக்காண்டபள்ளியைச் சேர்ந்த சாத்தப்பா (50), பாலகுறியைச் சேர்ந்த தனுஷ் (22), ஓசூரை அடுத்த தின்னூரைச் சேர்ந்த சரண் (23) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று சோதனையில் ஈடுபட்டதில் கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×