search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேனி அருகே 8 மாத கர்ப்பிணி திடீர் சாவு
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே 8 மாத கர்ப்பிணி திடீர் சாவு

    • 8 மாத கர்ப்பிணியாக இருந்தவர் தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
    • மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை.

    தேனி:

    போடி டொம்புசேரி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மனைவி சரண்யா (வயது 23). இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.

    மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை. உடனடியாக டொம்புசேரி ஆரம்பசுகாதார நிலைய டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி க்கப்பட்டது. போலீசார் சரண்யா இறப்புக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×