search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடி ஓட்டல் தொழிலாளி கொலையில் 8 பேர் சிக்கினர்-போலீசார் தீவிர விசாரணை
    X

    தூத்துக்குடி ஓட்டல் தொழிலாளி கொலையில் 8 பேர் சிக்கினர்-போலீசார் தீவிர விசாரணை

    • ஓட்டல் தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த கும்பல் பொன் செந்தில்முருகனை வெட்டி கொலை செய்தது.
    • தடுக்க வந்த வியாபாரி பழனிமுருகன் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ்நகரில் கருப்பசாமி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    ஓட்டல் தொழிலாளி

    இவரது கடையில் முடிவைத்தானேந்தலை சேர்ந்த பொன்செந்தில் முருகன், மடத்தூரை சேர்ந்த தேவராஜ், சாயர்புரத்தை சேர்ந்த சாமுவேல் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த ஓட்டலுக்கு 3-வது மைல் பகுதியை சேர்ந்த சிலர் அடிக்கடி சாப்பிட வருவது வழக்கம். அப்போது அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில் தகராறு செய்துள்ளனர்.

    வெட்டிக் கொலை

    அதனை கருப்பசாமியும், ஓட்டல் தொழிலாளர்களும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கும்பல் பொன் செந்தில்முருகனை வெட்டி கொலை செய்தது.

    மேலும் 3 பேருக்கு வெட்டு

    மேலும் தொழிலாளர்கள் வேதராஜ், சாமுவேல் மற்றும் தடுக்க வந்த வியாபாரி பழனிமுருகன் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்தினர்.

    8 பேர் சிக்கினர்

    இதில் தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த தினேஷ் (23), அவரது தம்பி கற்குவேல் (19), முத்தம்மாள் காலனியை சேர்ந்த ராபர்ட் ரகு (23), ராஜூவ்நகரை சேர்ந்த மிக்கேல் அந்தோணி அரவிந்த் (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் (21), முருகேசநகரை சேர்ந்த சக்திவேல் (19), விஷ்ணு (18) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 8 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×