search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலத்தில் குளிர்பானம் என நினைத்து கெமிக்கலை குடித்த 2 வயது குழந்தை சாவு
    X

    சேலத்தில் குளிர்பானம் என நினைத்து கெமிக்கலை குடித்த 2 வயது குழந்தை சாவு

    • நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.
    • இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் ஏற்படும் கரைகளை துடைப்பதற்காக ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மித்திக், இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×