search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செட்டிப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி
    X

    செட்டிப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி

    • விளையாடும் போது தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அருகே உள்ள ஒத்தகால் மண்டபத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்.

    இவரது மகள் ஹார்சினி (வயது 3). சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

    சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ஹார்சினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாகடர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×