என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தந்தை, மகன் மீது சரமாரியாக தாக்குதல்- 3 பேர் கைது
- சம்பவத்தன்று 17-ந் தேதி சந்தோஷின் தாத்தா முத்து தனது பேரனிடம் சுரேஷ்குமார் சேரக்கூடாது என்று கூறி சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- முத்துவின் மனைவி ராணி, ராஜா மற்றும் அவரது தம்பி முனியப்பன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் வத்தல்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 56). இவரது மகன் சுரேஷ்குமார் (22).
அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சந்தோஷ் (17). இந்த நிலையில் சுரேஷ்குமாரும், சந்தோஷும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் சந்தோஷிடம் பழக வேண்டாம் ராஜா கடந்த சில நாட்களாக சுரேஷ்குமாரை மிரட்டியுள்ளார்.
இதனை மீறி இருவரும் மீண்டும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று 17-ந் தேதி சந்தோஷின் தாத்தா முத்து தனது பேரனிடம் சுரேஷ்குமார் சேரக்கூடாது என்று கூறி சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்துவின் மனைவி ராணி, ராஜா மற்றும் அவரது தம்பி முனியப்பன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமாரையும் தாக்கியுள்ளனர்.
இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த 2பேரையும் மீட்டு சின்ராஜை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சுரேஷ்குமாரை தருமபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது மகன்கள் ராஜா, முனியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறவைாக உள்ள ராணியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்