என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காரைக்கால் திருநள்ளாறில் தம்பி-தம்பியின் மனைவியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
- திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
- பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தென்னங்குடி பகுதியைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது. கோர்ட்டிலும் இது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில், கலா அடிக்கடி பன்னீர்செல்வம் மற்றும் அவரதுமனைவி வசந்தியையும் ஆபாசமாக திட்டி அடிப்பதும், பிறகு போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம், பன்னீர்செல்வம், வீட்டு வாசலில் கொத்தனார் மூலம் வீட்டை பழுது பார்க்கும் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த கலா மற்றும் அவரது மகள் ரஞ்சிதா, இடப்பிரச்சனை இருக்கும் போது, எப்படி வேலை செய்யலாம் என ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த தென்னை மட்டை மற்றும் கொத்தனார் கருவியால், பன்னீர்செல்வத்தையும், அவரது மனைவி வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் சப்தம் போடவே, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கலா மற்றும் ரஞ்சிதா இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும், சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொ ண்டுசெ ல்லப்பட்டனர். அங்கு இருவரும் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் கலா மற்றும் ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்