search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சங்கராபுரம் அருகே தம்பதியை மிரட்டிய அண்ணன், தம்பிகள் 3 பேர் மீது வழக்கு
    X

    சங்கராபுரம் அருகே தம்பதியை மிரட்டிய அண்ணன், தம்பிகள் 3 பேர் மீது வழக்கு

    • மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
    • மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மனைவி மதியழகி (வயது 45). இவரது நிலத்துக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன்கள் பரமசிவம், ஆறுமுகம், செந்தில் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. சம்பவத்தன்று பரமசிவம் மற்றும் இவரது சகோதரர்கள் சேர்ந்து பொதுப்பாதையில் இருந்த மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

    இதை தட்டிக்கேட்ட மதியழகி, அவரது கணவர் சம்பத் ஆகியோரை பரமசிவம் மற்றும் அவரது சகோதரர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×