search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரோடுகளில் கால்நடைகளை திரிய விட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் - மாநகர போலீசார் கடும் எச்சரிக்கை
    X

    கோவையில் ரோடுகளில் கால்நடைகளை திரிய விட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் - மாநகர போலீசார் கடும் எச்சரிக்கை

    • சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    ேகாவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளில் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும அபாயம் உள்ளது. எனவே கோவை ரோடுகளில் கால்நடைகளை திரியவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகள் 2-வது முறையாக மீண்டும் சாலைக்கு வந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

    ஆனாலும் கோவை மாநகர சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. இந்த நிலையில் 62-ம் வார்டுக்கு உட்பட்ட சாரமேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ரோட்டில் திரிவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நடுரோட்டில் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு குதிரை ஆகியவை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், கால்நடைகளை வளர்ப்போர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×