search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நத்தம் அருகே கல்லூரி மாணவனை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
    X

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    நத்தம் அருகே கல்லூரி மாணவனை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

    • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    நத்தம்:

    நத்தம் அருகே குமர ப்பட்டிபுதூரை சேர்ந்தவர் சின்னையா மகன் அழகேசன் (வயது21). இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் 4 வழிச்சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டினர். மேலும் அழகேசனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இது குறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அத்திப்பட்டு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த ஆகாஷ் (22), நத்தம் பரளிபுதூரை சேர்ந்த அபிமன்யூ (23), காளையார்கோவிலை சேர்ந்த ஹரிதர்ஷன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர். இதில் ஹரிதர்ஷன், ஆகாஷ் ஆகியோர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் அவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×