search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மரம் விழுந்து வியாபாரி மகன் நசுங்கி சாவு
    X

    மரம் விழுந்து வியாபாரி மகன் நசுங்கி சாவு

    • மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுக்கியது.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு சொந்தமாக தோப்பு உள்ளது. இதில் உள்ள மரங்களை வெட்டி விற்க பழனி முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் தருமபுரியை அடுத்துள்ள வாணியகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மர வியாபாரி நடராஜன் என்பவர் பழனியிடம் பேசி மரங்களை வெட்டி வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நடராஜன், அவரது மகன் அன்பு (வயது 28) மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்களுடன் மஞ்சமேடு சென்றனர். அங்கு தொழிலாளிகள் மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வெட்டப்பட்ட மரங்களை கயிறு கட்டி கீழே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக வெட்டப்பட்ட மரம் ஒன்று அன்பு மீது விழுந்து நசுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அன்பை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அன்பு உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நடராஜன் தந்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×