search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பண்ருட்டி அருகே தீயில் மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி
    X

    பண்ருட்டி அருகே தீயில் மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

    • சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார்.
    • அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் கீழக்குப்பம் நாச்சியார் தெருவை சேர்ந்தவர் சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. கடந்த 4-ந்தேதி தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார். அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×