search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சங்கராபுரம் அருகே மாடு முட்டி விவசாயி பலி
    X

    சங்கராபுரம் அருகே மாடு முட்டி விவசாயி பலி

    • பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்று,மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்றார், அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது.
    • இதில்,பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகன் பிச்சன்(53) விவசாயி. இவர் தனது 2 பசுமாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஒட்டி சென்றார். பின்னர் மீண்டும் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்,

    அப்போது அதில் ஒரு மாடு திடீரென பிச்சனை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×