search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தூத்துக்குடியில் செங்கலால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்ற கும்பல்- 4 பேருக்கு வலைவீச்சு
    X

    தூத்துக்குடியில் செங்கலால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்ற கும்பல்- 4 பேருக்கு வலைவீச்சு

    • அமல்ராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகிறார்.
    • 4 பேர் கும்பல் அமல்ராஜை செங்கலால் தாக்கி கொல்ல முயன்று உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவைகுளம் நவமணி 2-வது தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது29) இவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் (31) மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை தாள முத்துநகர் திரேஸ்நகர் பகுதியில் அமல்ராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடன் முன்பு வேலை செய்தவர் உட்பட 4 பேர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இதனைக் கண்ட அமல்ராஜ் அதனை தடுத்து நிறுத்தி விலக்கி விட்டு அவர்களை சத்தம் போட்டார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அமல்ராஜை அடித்து உதைத்துள்ளனர்.

    வீட்டுக்கு வந்த அமல்ராஜ் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் அவர்கள் காயம் பட்ட இடத்தில் மருந்து போட்ட பின்னர் பேசிக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டுக்கு வெளியே அமல் ராஜ் வரும்போது அங்கு வந்த அதே 4 பேர் கும்பல் அமல்ராஜை மீண்டும் செங்கலால் தாக்கி அவரை கொல்ல முயன்று உள்ளனர்.

    இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    அதில் தாக்குதலின் ஈடுபட்டது டி.சவேரி யார்புரத்தை சேர்ந்த தாமஸ்,செண்பகராஜ், சந்தோஷ், மில்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    Next Story
    ×