search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    கோவையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

    • அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் அபிலாஷ்க்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அபிலாஷிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். அவர் பலமுறை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் இளம்பெண் பேச மறுத்து விட்டார். இதனால் அபிலாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×