search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளியில் முப்பெரும் விழா
    X

    பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரசு பள்ளியில் முப்பெரும் விழா

    • தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளியை தரம் உயர்த்த ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர்.
    • மாணவர்களின் சிறப்புரைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருமங்கலக்குடி ஊராட்சி தலைவர் பத்மினி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை நளினி ஆண்டறிக்கையை வாசித்தார். திருமங்கலக்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் பாத்திமா பேகம் ஆஷாத் அலி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலர் நிவேதா, எஸ். எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பாக்கியராஜ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பேசுகையில், இந்த குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, மாணவர்களின் தனித்திறமையிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக இந்த பள்ளியை தரம் உயர்த்த அயராது பாடுபட்டு வருகின்றனர் என்றனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்களின் சிறப்புரை களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, 2-ம் நாளாக திருவிடைமருதூர் சண்முக. கண்ணன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கண்ணதாசன், பிரபாகரன், சிந்து, ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

    முடிவில் ஆசிரியை ராஜாத்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×