search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆற்றில் மிதந்த ஆண் சடலம்
    X

    மீட்கப்பட்ட ஆண் சடலம்.

    ஆற்றில் மிதந்த ஆண் சடலம்

    • கைப்பற்றப்பட்ட சடலம் ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • மேலும், ஆற்றுத்தண்ணீரில் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் - கொன்றைக்காடு இடையே கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதாக அப்பகுதி மக்கள் கொன்றைக்காடு கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகிக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு பேராவூரணி வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகி, கிராம உதவியாளர்கள் விஜயா, அம்பிகா ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

    தொடர்ந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ரஜினி, சுப்பையன், நீலகண்டன், சந்தனகுமார், கொன்றைக்காடு சமூக ஆர்வலர்கள் கணேசன், கர்ணன் ஆகியோர் ஆற்றில் இறங்கி சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர், கைப்பற்ற ப்பட்ட சடலம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீட்கப்பட்டது சுமார் 35 வயதுடைய ஆண் சடலம் என்பது தெரியவந்தது.

    மேலும் ஆற்றுத் தண்ணீரில் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

    அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×