search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கதிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்த மினி மாரத்தான் ஒட்டம்
    X

    கதிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்த மினி மாரத்தான் ஒட்டம்

    • கிராமங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமான மனநிலையை பெறுவார்கள்.
    • ஆரோக்கியத்தை பேணுவதற்காக கிராம மக்கள் ஒன்று இணைந்து செயல்படுவார்கள்

    நீலாம்பூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற பிரிவு சார்பில் பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.2 என்ற பெயரில் மினி மாரத்தான் நடந்தது.

    இதில் கல்லூரி மாணவிகள் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    மாரத்தானை கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் நீலாம்பூர் ஊராட்சி தலைவர் சாவித்திரி சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவிகள் கூறும்போது,

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் போது கிராமங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமான மனநிலையை பெறுவார்கள். ஆரோக்கியத்தை பேணுவதற்காக கிராம மக்கள் ஒன்று இணைந்து செயல்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×