search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோத்தகிரி அருகே பாறை இடுக்கில் சிக்கிய குட்டியை மீட்க போராடிய தாய் கரடி
    X

    கோத்தகிரி அருகே பாறை இடுக்கில் சிக்கிய குட்டியை மீட்க போராடிய தாய் கரடி

    • தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
    • தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கரக்கோடு மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.

    அப்போது எதிர் பாராதவிதமாக குட்டி பாறை இடுக்கில் சிக்கி கொண்டது. இதனை கண்ட தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டியை மீட்டு தாய் கரடியுடன் சேர்த்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாய்கரடியின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.

    Next Story
    ×