என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறையில் பக்கத்து வீட்டுக்காரருடன் கைகலப்பில் ஈடுபட்டவர் திடீர் மரணம்
- வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது என்றுள்ளார்.
- வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றாவை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 57). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழி விடாமல் அவரது வாகனத்தை நிறுத்தி இருந்தார். இது குறித்து சின்னப்பராஜ் கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர்.
வீட்டு முன்பு உள்ள வாசலில் அமர்ந்து இருந்த சின்னப்பராஜ் அவரது மனைவியிடம் படபடப்பாக உள்ளது. எனவே குடிக்க சுடுதண்ணீர் வேண்டும் என கேட்டார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சின்னப்பராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வால்பாறை போலீசார் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தாக்கியதில் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் இது இயற்கை மரணமா அல்லது தாக்குதலா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்