என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெசவு தறி உதிரிபாகங்கள் விற்கும் கடையில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
Byமாலை மலர்12 Oct 2022 9:59 AM GMT
- அங்கம்மாள் காலனி அண்ணா நகர் பகுதியில் நெசவுத் தொழிலுக்கு உண்டான உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
- நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் அங்கம்மாள் காலனி அண்ணா நகர் பகுதியில் நெசவுத் தொழிலுக்கு உண்டான உதிரிபாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூபாய் 80,000 ரொக்கப்பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபு உடனடியாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகி–றார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X