என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பஸ் படியில் பயணம் செய்த மாணவர் விபத்தில் சிக்கி படுகாயம்
- கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
- திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி அவுரி மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல நேற்று பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது பஸ்சின் படியிலேயே நின்று கொண்டு சென்றுள்ளார். திருமருகல் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன்குமாரின் கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
இதில் அவரின் காலில் மூன்று விரல்கள் எலும்பு நொறுங்கியது.
இது குறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் பிரவீன் குமாரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பிரவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்