என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் வாலிபர் திடீர் தற்கொலை
- தன்னை பார்த்து கொள்ள யாருமே இல்லை மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய், தந்தையும் இறந்து விட்டனர். இவரது தம்பி வெளியூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பிரகாஷ் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் தன்னை பார்த்து கொள்ள யாருமே இல்லை என மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும், இதன் காரணமாக எங்கு வேலைக்கு சென்றாலும் அங்கு என்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும், இதனை கடவுள் கனவில் வந்த கூறியதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்தார்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் கடந்த 5-ந் தேதி பொள்ளாச்சியில் இருந்து செல்லாண்டி கவுண்டன்புதூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்தார். இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பிரகாஷ் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது வீட்டில் இருந்த தூர்நாற்றம் வந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டில் பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்