search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வடகோவை அருகே வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி
    X

    வடகோவை அருகே வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி

    • 40 வயது மதிக்கதக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    வடகோவை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்வாளத்தில் 40 வயது மதிக்கதக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×