என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப சாவு
Byமாலை மலர்20 Oct 2022 9:43 AM GMT
- கவுதமன் (வயது 26). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு எதிர்பாராதவிதமாக சிமெண்ட் டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி வேலுப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் கவுதமன் (வயது 26). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு எதிர்பாராதவிதமாக சிமெண்ட் டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் அந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி கவுதமன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி போலீசார், பலியான கவுதமன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X