search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப சாவு
    X

    சேலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப சாவு

    • கவுதமன் (வயது 26). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு எதிர்பாராதவிதமாக சிமெண்ட் டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலுப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் கவுதமன் (வயது 26). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு எதிர்பாராதவிதமாக சிமெண்ட் டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் அந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி கவுதமன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி போலீசார், பலியான கவுதமன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×