search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது
    X

    காருக்குள் பிணமாக கிடக்கும் மணிகண்டன்.

    பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது

    • காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்‌.
    • போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    மதுரை மாவட்டம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36 ). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு கோவைக்கு சென்றார். நேற்று இரவு தஞ்சைக்கு வந்த அவர் தனது காரை எடுக்க முயன்றார்.

    அப்போது கார் கதவு திறந்திருந்தது. காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்‌.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டபோது இறந்து கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி இருந்தது.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசார ணையில் காருக்குள் பிணமாகக் கிடந்தவர் தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பது தெரிய வந்தது.

    அவர் பாப்பாநாட்டில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் சரியாக பூட்டப்படாத அருண்குமாரின் காரின் கதவை திறந்து உள்ளே சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அப்போது கார் உள் பக்கமாக பூட்டப்பட்டு விட்டது.

    இதனை அறியாத மணிகண்டன் காரு க்குள்ளே இருந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இருந்தாலும் மணிகண்டன் மூச்சு திணறி தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகும், முழுமையான விசாரணைக்கு பிறகும் மணிகண்டன் மரணத்தின் உண்மை தன்மை தெரிய வரும்.

    Next Story
    ×