search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சங்கராபுரம் அருகே  வாகனம் மோதி வாலிபர் பலி
    X

    சங்கராபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

    • வினிஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழைய சிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
    • வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ் மகன் வினிஷ்குமார்(20). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையத்திலிருந்து பழையசிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பழையசிறு வங்கூர் அருகே சென்று கொண்டி ருந்தபோது, தியாகதுருகத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி எதிரே வந்த சரக்கு வாகனம் அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாய மடைந்த வினிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெ க்டர் சூர்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினிஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×