search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் முகமூடி அணிந்து நகைப்பட்டறையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    கோவையில் முகமூடி அணிந்து நகைப்பட்டறையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

    • விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
    • கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை அருகே பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷால் (வயது31). இவர் அந்த பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோருடன் பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது, தலைக்கு கருப்பு முகமூடி மற்றும் கையுறைகளால் தலையை மூடி கொண்ட ஒருவர், திடீரென நகை பட்டறைக்குள் நுழைந்தார். அங்கு இருந்த விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இதையடுத்து பட்டறையில் வேலை பார்த்து கொண்டு இருந்த விஷால், மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோர் உதவியுடன் முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து முகமூடி கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகமூடி கொள்ளையன் கோவை ராஜா நகரை சேர்ந்த சுரேஷ் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×