search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மிடி அருகே கஞ்சா விற்ற பெண் பிடிபட்டார்
    X

    பொம்மிடி அருகே கஞ்சா விற்ற பெண் பிடிபட்டார்

    • விஜயநகரம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.

    அரூர்,

    தருமபுரியை அடுத்துள்ள பொம்மிடி விஜயநகரம் கிராமத்தில், பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கனேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புனிதவதி, ஏட்டு நதியா ஆகியோர், விஜயநகரம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், அப்பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்திப்பிடித்து, வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, வீட்டின் பின்புறம் சாக்கு பையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.

    Next Story
    ×