என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் குழந்தைகள் முன்பு அரை நிர்வாணமாக நின்ற வாலிபர்
- வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.
- வாலிபரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரமடை
கோைவ மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது(வயது22). இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று சாகுல்ஹமீது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள தெருவில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் வெளியில் வந்து குழந்தைகளையே பார்த்து கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் என்ன யோசித்தார் என தெரியவில்லை. திடீரென வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.
நேராக குழந்தைகள் விளையாடிய பகுதிக்கு சென்று அவர்கள் முன்பு நின்றார். இதனை அங்கு விளையாடிய சிறுவர், சிறுமிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு ஓடிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் சிறுவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் நேராக மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சாகுல்ஹமீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்