search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் மரத்தில் பிணமாக தொங்கிய இளம்பெண்
    X

    கோவையில் மரத்தில் பிணமாக தொங்கிய இளம்பெண்

    • விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை :

    கோவை ரேஸ்கோர்சில் தனியார் கல்லூரி செயல்ப ட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளது. விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×