search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்
    X

    ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

    • மேளதாளம் முழங்க ஆண்டாள்-ரெங்க மன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    108 வைணவ திருத்தலங்க ளில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தின மான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக் கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 3-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (7-ந்தேதி, புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க மிதுன லக்னத்தில் ஆண்டாள்-ரெங்க மன்னார் திருத்தேரில் எழுந் தருளினர்.

    காலை 9.05 மணிக்கு தேரோட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத் தார். இதில் தமிழகம் மட்டு மின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத் தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.

    தேரோட்டத்தை முன் னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக் கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்தி ரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.

    Next Story
    ×