search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் விபத்து:லாரி மோதி தொழிலாளி பலி
    X

    தூத்துக்குடியில் விபத்து:லாரி மோதி தொழிலாளி பலி

    • பாஸ்கர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள பெரியசாமிநகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்திருப்பேரையை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×