search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓசூர் அருகே விபத்து: ஈரோடு வாலிபர் பலி
    X

    ஓசூர் அருகே விபத்து: ஈரோடு வாலிபர் பலி

    • மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
    • மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது 26). இவர் தனது சொந்த வேலையாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

    வழியில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மகேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் கார் ஷோரூம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகாதேவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வண்டியை ஓட்டி வந்த மகேஷ் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×