என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரையில் பழுதான சாலையால் அடிக்கடி விபத்து
- 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலைகள் கடல் நீரால் அரிக்கப்பட்டு ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.
- குறிப்பாக இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சாலையாக இச்சாலை மாறி போய்யுள்ளது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் அன்றாடம் வணிகம் நடக்கும் இப்பகுதியில் போதிய அளவு சாலை வசதி இல்லாததால் மீன் கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் சாலை பள்ளங்களில் இடறி விழுவதால் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலைகள் கடல் நீரால் அரிக்கப்பட்டு ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது.
100 சதவீதம் மீன் பிடி தொழிலை மட்டும் நம்பி இருக்க கூடிய இக்கிராம மக்களுக்கு போர்கால அடிப்படையில் சாலையை புதுப்பித்து தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் சக்தி கூறும்போது, காதிர் முகைதீன் பள்ளி சாலை முதல் கீழத்தோட்டம் வரையிலான 4.5 கிலோ மீட்டர் சாலைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு விரைவாக சாலை பணிகள் நடக்க உள்ளது.
மீன்பிடி துறைமுக சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற சாலையாக உள்ளதை கவனத்தில் கொண்டு உரிய துறைக்கு புகாராக அனுப்பி உள்ளோம்.
அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் மீனவ கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான இச்சாலையை புதுப்பித்து தர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மீனவரான சுந்தராஜ் கூறுகையில், மீன்பிடி தொழிலாளர் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து இருக்ககூடிய சூழலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இக்கிராமத்திற்கு மீன் கொள்முதல் செய்ய யாரும் வருவது இல்லை.
குறிப்பாக இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத சாலையாக இச்சாலை மாறி போயுள்ளதால், பிடிக்கும் மீன்களை குறைந்த விலைக்கே விற்பனை செய்வதாகவும், இதனால் மீன் பிடி தொழில் நலிவடைந்து பிற தொழிலை நாட வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்