search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வால்பாறையில் நடந்த முகாமில் 133 மனுக்கள் மீது நடவடிக்கை
    X

    வால்பாறையில் நடந்த முகாமில் 133 மனுக்கள் மீது நடவடிக்கை

    • மக்கள் தொடர்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.
    • 80 நபர்களுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    வால்பாறை,

    வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.

    சப்-கலெக்டர் பிரியங்கா நகராட்சி தலைவி அழகு சுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    133 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நிவாரண நிதி, தனிநபர் கடன், தையல் எந்திரம், முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோர் நல நிதி என பல்வேறு பிரிவுகளின் கீழ் 80 நபர்களுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×