search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்
    X

    பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கலெக்டர் சாருஸ்ரீ.

    குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    • கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
    • ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்ட த்தில், பொது மக்கள் பட்டாமாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 163 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்க ளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்தினாளிகளுக்கு சுயதொழில் வங்கி கடன் மானியம் ரூ.178334 மற்றும் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.2780 மதிப்பிலான காதொலி கருவி என மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×