search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசிய போது எடுத்த படம்.

    ஓசூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    • முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
    • முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் முனீஸ்வர் நகர், ரிங் ரோடு சந்திப்பில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, அமைப்பு செயலாளர் சிங்காரம் மற்றும் கலைமாமணி சிவன் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் இதில், மாநில, மாவட்ட, மாநகர ,ஒன்றிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவை யொட்டி, ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. முடிவில், மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

    Next Story
    ×