search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மீஞ்சூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மீஞ்சூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினர்
    • ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் அதிமுக சார்பில் மீஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் மற்றும் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தலைமை தாங்கினர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரனி செயலாளர் ராகேஷ், கவுன்சிலர்கள், பானுபிரசாத், சுமித்ரா குமார், செல்வழகி எர்ணாவூரான், கோளூர் கோதண்டம், மீஞ்சூர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    Next Story
    ×