search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் இன்று திடீரென உள்வாங்கிய அக்னி தீர்த்தக்கடல்
    X

    ராமேசுவரத்தில் இன்று திடீரென உள்வாங்கிய அக்னி தீர்த்தக்கடல்

    • பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
    • படகுகளும் தரைதட்டி நின்றது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராம நாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை நாளில் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.

    எனவே மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு இருப்பால் ராமேசுவரத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவ ரத்தில் குவிந்தனர். அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வழக்கமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் நிலையில் அக்னி தீர்த்தக் கடலில் நீர் மட்டம் உள்வாங்கி காணப்பட்டது.

    அதன்படி இன்று காலை அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியது. இந்த நிகழ்வு அங்கு வந்த பக்தர்களுக்கு புதியதாக இருந்தது. சுமார் 150 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் பவளப்பாறைகள் வெளியில் தெரிந்ததோடு சேறும், சகதியுமாக காணப்பட்டன. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் தரைதட்டி நின்றது.

    சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. கடல் உள்வாங்குவது உள்ளூர் மக்களுக்கு வழக்கமானதாக இருந்தாலும், வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் உள்வாங்கிய கடலை செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடிக்கொண்டு இருக்கும் போது திடீரென நகராட்சி சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து கழிவு நீரை திடீரென திறந்து விட்டதால் நுர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் நீராடிக்கொண் டிருந்த பக்தர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    அக்னி தீர்த்தம் என இறை நம்பிக்கையுடன் நீரா டும் இடத்தில் கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அந்த பகுதியில் நீராடும் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டால் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர்.

    Next Story
    ×