search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொதுமக்களின் அனைத்து குறைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் கீதாஜீவன் உறுதி
    X

    தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் மனுக்களை பெற்றுக்கொண்ட போது எடுத்தபடம்.

    பொதுமக்களின் அனைத்து குறைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் கீதாஜீவன் உறுதி

    • 9-வது வார்டுக்குட்பட்ட பூபால்ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.
    • அப்பகுதியில் குடியிருக்கும் பலர் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் இன்னும் பட்டா வழங்கவில்லை அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் 9-வது வார்டுக்குட்பட்ட பூபால்ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

    அமைச்சர் உத்தரவு

    அப்போது அதில் சில பகுதி களுக்கு சீரான முறை யில் தண்ணீர் வரவில்லை. சாலைகளும் சேதம் அடைந்து நிலையில் உள்ளது என்று எடுத்துக் கூறினார்கள். அனைத்து தரப்பி னரின் கோரிக்கை களும் முழுமையாக கேட்டறிந்து மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் வழங்கி அதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    பின்னர் பூபால் ராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதி களில் சில குறைபாடு கள் இருப்பதை சரிசெய்ய வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். அப்பகுதியில் குடியிருக்கும் பலர் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் இன்னும் பட்டா வழங்க வில்லை அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    சீரான குடிநீர்

    அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

    இந்தபகுதியில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரி க்கைகளின் அடிப்படையில் புதிய தார்சாலை, குடி தண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதி களுக்கும் அமைக்கப்ப டாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும்.

    மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரி களிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைக ளையும் முழுமையாக நிறை வேற்றி தருவேன். விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணன், கவுன்சிலர் ஜெபஸ்டின் சுதா, வட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனிய சாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரி கணேஷ், கல்யாண சுந்தரம், ஆணை யரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, அல்பட், காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×