search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தில்லைவிளாகத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்
    X

    தில்லைவிளாகத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்

    • ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய ரெயில்வே மந்திரிக்கு, தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள தில்லைவிளாகம் ரெயில் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் ரெயில்வே அமைச்சர் கும்மட்டிதிடல் அமரர்சந்தானம் சொந்த ஊருக்கு அருகில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான ராமர், நடராஜர் கோவில் உள்ள கிராமத்தின் பெயர் கொண்ட ரயில் நிலையம் ஆகும்.

    உலகப் பிரசித்தி பெற்ற ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×