search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலையில் தீப்ப்பிடித்து மூதாட்டி சாவு
    X

    சேலையில் தீப்ப்பிடித்து மூதாட்டி சாவு

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே சானிப்பட்டி பகுதியில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே சானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலையாளி. இவரது மனைவி ராமாயி(வயது 75 ). கூலி தொழிலாளி. இவர் அவரது வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் நேற்று தென்னை மட்டைகளை வைத்து எரித்து சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அடுப்பில் இருந்த தென்னை மட்டை வெடித்து அதிலிருந்து நெருப்பு பொறி ராமாயின் சேலையில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதனால் ராமாயி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இராமாயின் மகன் வரதராஜ்( 56 )என்பவர் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கடலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×