search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி சுமையை தளர்த்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லதா, சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர், வெளியூர் பணி மாறுதல் உடனே வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்படும் பணி சுமையை தளர்த்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×