search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழக காவல்துறைக்கு விரைவில் பதில்- அண்ணாமலை
    X

    அண்ணாமலை (கோப்பு படம்)

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழக காவல்துறைக்கு விரைவில் பதில்- அண்ணாமலை

    • இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
    • உயர் அதிகாரிகள் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    கோவையில் கார் வெடிப்பு நிகழப் போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது அபத்தமானது என்றும், அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றும் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் கூறியுள்ளதாவது: தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்.

    காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

    காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×