search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் ஆண்டு விழா; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பள்ளியில் ஆண்டு விழா; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி தெற்கு வீதி ச.மு.இ நடுநிலைப்பள்ளியில் 127-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் நாகராஜன், பொன்.பூங்குழலி முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சி.பாலமுருகன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் பங்கேற்று பேசினார். 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரி–யர்கள் மனோரஞ்சிதம், தையநாயகி, குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டு, பரிசுகள் வழங்கி கெளர வித்தனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது

    பட்டதாரி ஆசிரியை ஶ்ரீப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

    Next Story
    ×