search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கல்லூரியில் ஆண்டுவிழா: போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
    X

    போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சை கல்லூரியில் ஆண்டுவிழா: போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

    • மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.
    • போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் 13-வது ஆண்டு விழா நடந்தது.

    விழாவில் கல்லூரி தாளாளர் ஜோசப் லயனல் மற்றும் முதல்வர் மேரி கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் அமுதா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

    பின்னர், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாணவிகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.

    தொடர்ந்து, தேர்வு, வருகை பதிவு, மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும், கலந்துகொண்ட வர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×