search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் ஆண்டு விழா
    X

    பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் ஆண்டு விழா

    • முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார்.
    • இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 28-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவின் போது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் முன்னாள் அமைச்சர் வீரமணி தங்க நாணயங்களை வழங்கினார்.

    முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், வேளாங்கண்ணி அகாடெமியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தம்பிதுரை எம்.பி., தங்க நாணயங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

    இந்த விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மேலும் ஆவின் முன்னாள் தலைவர் தென்னரசு, ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சிட்டி ஜெகதீசன், வக்கீல் அசோகன், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழுமப் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இன்ஜினியர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜலஜாக்ஸி நன்றி கூறினார்.

    Next Story
    ×