search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில்  ஆண்டு விழா
    X

    அரசு பள்ளியில் ஆண்டு விழா

    • விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார்
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் கல்வி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் எச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சுஜாதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ்,வேதா மற்றும் கோவிந்தப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவையொட்டி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் கவுன்சிலர் சம்பங்கியம்மா மல்லேஷ், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பரமேஷ், துணைத்தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், லோகேஷ், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

    Next Story
    ×