search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி மாணவர்கள்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

    • கல்லூரிகளில் பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வினாடிவினா, கட்டுரை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவ மாணவியர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகம்- சென்னை, தேசிய தொழில் நுட்பக்கழகம்-திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகம்- காரைக்கால் மற்றும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டனர்.

    அதில் தொழில் நுட்ப நிகழ்வுகள் பிரிவில் நடைபெற்ற தொழில் நுட்ப வினாடிவினா, திட்ட விளக்கக் காட்சி, கட்டுரை சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

    போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் சங்கர் கணேஷ், கல்வி சார் இயக்குனர் மோகன், நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், முதல்வர் ராமபாலன், துறைத் தலைவர் தேவராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×